×

குலம் காக்கும் குரு கோயில்கள்

அயப்பாக்கம்

சென்னை அயப்பாக்கம், வட குருஸ்தலம் என்றே அழைக்கப்படுகிறதுஇதற்கு முக்கிய காரணம், அங்கே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திதான்அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? பிரமாண்டம்தான்16 அடி உயர மூர்த்தி இவர்குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர்
என்பது பக்தர்களின் அனுபவம்

காஞ்சிபுரம் யோக தட்சிணாமூர்த்தி

பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனியில் உள்ளது யோக தட்சிணாமூர்த்தி ஆலயம்குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலைசனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோக நிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை எனப்படும்அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

குச்சனூர் வடகுரு பகவான்

தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள்கிறார்இந்த ராஜயோக தட்சிணாமூர்த்தி சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார்சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவர் இவர்இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்

பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது பட்டமங்கலம்இக்கோயிலில் 2000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.அருகிலுள்ள அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்ரபாக்கியத் தடைகள் உடனடியாக நீங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

சுருட்டப்பள்ளி

ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்பாற்கடல் கடையும்போது வெளியான ஆலகால விஷத்தை உண்ட ஈசன் சற்றே மயங்கிய நிலையில் உமையின் மடியில் படுத்த வண்ணம் காட்சி தரும் இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாய் அருள்கிறார்இல்லறத்தில் ஏற்படக்கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்தும் தயாபரன் இவர்

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளதுவலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார்வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளதுஇடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம்தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை இங்கே தரிசிக்கலாம்

தாராசுரம்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தென்முகக் கடவுள் அருள்கிறார்பிற கோயில்களைப் போலவே இங்கும் வியாழக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் இவர்முன் பணிந்து நிற்கிறதுகல்வி, கலைகளில் தேர்ச்சி பெற இவரை வணங்குவது பக்தர்களின் வழக்கம்

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளதுசுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார் இவர்ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பது போல் அமைந்துள்ளது

ஆலங்குடி

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சாலையில் 17வது கிலோமீட்டரில் உள்ளது ஆலங்குடிதட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும்ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைப்பாடுகளுடன் தரிசிக்கலாம்திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர்ஆறு கால அபிஷேகம் கண்டருளும் தெய்வம்

குருவித்துறை

குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம், குருவித்துறைமதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உள்ளனகுருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்

திருவையாறு

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடதுகரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத்துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் திருக்காட்சியளிக்கிறார்சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார் இவர்

திருவலிதாயம் (பாடி)

சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில்மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார்.உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்கு நிலையில் உள்ளதுபுலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார்இந்த திருவடிவம் ‘வ்யாக்யான தட்சிணாமூர்த்தி’ என அழைக்கப்படுகிறது

திருநெடுங்களம்

திருநெடுங்களம் தலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார்இவருக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட தடைகள் தவிடு பொடி
யாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

திருப்புனவாசல்

இடது கரத்தை நாகப்பாம்பு அணி செய்கிறதுகால்களோ அசுரனை மிதித்தபடி தன் வெற்றியை பறைசாற்றுகின்றனகம்பீரமான தோற்றம்‘அவநம்பிக்கை, பொறாமை, கோபம் போன்ற துர்குணங்களை நசுக்குவதுபோல, கால்களால் அசுரனை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி.

Tags : Protecting Guru ,Chennai ,Ayapakkam ,North Krusthalam ,Kanchipuram Yoga ,Murthy ,
× RELATED தாண்டவத்திலும் சாட்சியாக இருந்து தரணியாளும் அம்பிகை