திருவாரூர், மே 26: திருவாரூர் அருகே போதையில் ரகளை செய்த பள்ளி மாணவன் உட்பட 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீசரகத்திற்குட்பட்ட திருப்பள்ளிமுக்கூடல் கிராமத்தைசேர்ந்தவர்கள் அன்பழகன் மகன் விக்னேஷ் (23) மணியரசன் மகன் மதிவாணன் (22) மற்றும் திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் என மூன்று பேர்களும் நேற்று முன்தினம் திருப்பள்ளி முக்கூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே சாலையில் அரிவாளுடன் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் ஆபாச வார்த்தைகளை கூறி அச்சுறுத்தியது மட்டுமின்றி நாங்கள் கஞ்சா வைத்திருப்போம், விற்ப்போம் யார் கேட்பது என தெரிவித்துள்ளனர்.
