பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

 

திருவாரூர், மே 26: திருவாரூர் மாவட்டத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளை கலெக்டர் மோகனசந்திரன் பாராட்டினார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி துவங்கி 26ம் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி கடந்த மாதம் 20ம் தேதி நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 850 மாணவர்களும், 7 ஆயிரத்து 46 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 896 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் 5 ஆயிரத்து 57 மாணவர்களும், 6 ஆயிரத்து 678 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories: