சென்னை: சென்னை மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மே 22ம் தேதி கடலில் குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட சுதர்சன் (16) உடல் நேற்று இரவு துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மெரினா போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
