சிவகிரி,மே 25: வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பராமரிப்பு பணியால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயர்கல்விக்கான பரிந்துரை மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கான பரிந்துரை கடிதங்கள் தேவைப்படுவோர் செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று ராஜா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்ற பின்னர் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டு தினமும் செயல்படும்.
எனவே தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உயர்கல்விக்கான பரிந்துரை கடிதங்கள் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு மருத்துவமனைகளுக்கான பரிந்துரை கடிதங்கள் போன்ற அவசர தேவைகளுக்கு 90804 04049என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
