திருப்பூர்: கொடுவாய் அருகே நேற்று மாலை அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை கழன்று போய் காற்றில் பறந்து பின்னால், டூவீலரில் சென்றவர் மீது விழுந்ததில் சிறிய காயத்துடன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
