கோவை: கோவை சிறுமி கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் இதுவரை ஒரு ஆறுதல் கூட கூறவில்லை என சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது தொடர்பாக கூட முதலமைச்சர் பேசவில்லை என சிறுமியின் உறவினர்கள் குற்றசாட்டுக்கின்றனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.
