சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின் ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின் ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை மீட்டனர். தண்டையார்பேட்டையில் கடந்த 2 நாட்களாக இரவில் மின்வெட்டால் மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். மின்வெட்டு குறித்து புகாரளிக்க போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: