×

சிலாவட்டம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகள்

மதுராந்தகம்: சிலாவட்டம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகள் ேமற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோழிப்பண்ணை தெருவில் ரூ.5.60 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை, ஸ்கூல் பின்புறம் சாலையில் ரூ1.45 லட்சம் செலவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, அய்யனார் கோவில் கண்ணதாசன் நகர் பகுதியில் குடிநீர் இணைப்புகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதியின் மூலமாக சிலாவட்டம் சுடுகாடு பாதைக்கு ரூ.10 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் நர்சரி செடிகள் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புற சாலைகள் சீரமைப்பு, புதிய சிமென்ட் சாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் மேம்பாடு மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவுநீர் கால்வாய் தூய்மை பணிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் மூலம் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள் மேம்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்பட்டுவரும் சிரமங்கள் குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 15வது நிதிக்குழு நிதியின் மூலம் தொடர்ந்து மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags : CHILAWATM URADCHI ,15TH FUND GROUP ,Maduranthakam ,Chilawatam Uradchi ,Silavatam Uradchi ,
× RELATED தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்