மயிலாடுதுறை, மே 23: மயிலாடுதுறை நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்வச் சர்வேக்ஷான் 2026 நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் தூய்மை திருவிழாவின் முதல் நிகழ்வாக விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது. நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி பெரிய கண்ணாரத் தெரு, கச்சேரி ரோடு வழியாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியானது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை,அபாயகரமான கழிவுகள்,மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் என நான்கு கழிவுகளாக பிரித்து வழங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.
