×

கஞ்சா விற்ற 3 பேர் கைது

 

நாகப்பட்டினம், மே 23: நாகப்பட்டினம் அருகே புத்தூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நாகை நகர போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை புதிய பாலம் பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்ற மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகை வெளிப்பாளையம் நாடார் தெருவை சேர்ந்த ஆதித்யா(21), வெளிப்பாளையம் வஉசி. தெருவை சேர்ந்த ராஜகுமாரன் (23), தாமரைக்குளம் தென்கரையைச் சேர்ந்த ரோகித் (20) என்பதும் மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags : Nagapattinam ,Puttur ,Inspector ,Sundarrajan ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்