பானிபூரி கடை நடத்தி வரும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் கைது

 

கோவை, மே 23: பானிபூரி கடை நடத்தி வரும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கோவை சீரநாயக்கன் பாளையம், டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சரவணதேவி (23). இவர், கோவை பி.என்.புதூர், புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி இரவு சரவணதேவி தனது கடையில் வியாபாரத்தைக் கவனித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர், கடையில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சரவணதேவியிடம்,“நீ இந்த இடத்தில் தொடர்ந்து கடை நடத்த வேண்டுமானால், எனக்கு உடனடியாக 1,000 ரூபாய் தர வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு சரவணதேவி தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணதேவிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories: