×

தேர்தல் இலவசங்களுக்கு தடை கேட்ட வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் விசாரணை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

 

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களை கவரும் திட்டங்கள் மற்றும் இலவசங்கள் ஆகியவை குறித்து அறிவித்தது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதனால் மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும் தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட வழக்கானது நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில்,” இதுபோன்ற வழக்கில் உடனடியாக உத்தரவை பிறப்பிக்க முடியாது. விரிவாக விசாரிக்க வேண்டும். எனவே கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் தேர்தல் இலவசங்கள் குறித்த மனுக்கள் பட்டியலிட்டு விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,Jaysukhin ,K.K. Ramesh ,Madurai ,Supreme Court… ,
× RELATED நான்கரை மணி நேரமாக நடந்த ஒன்றிய...