சென்னை: தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று முதல்வர் விஜய் பேட்டரி காரில் சென்று சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பழமையான தேவாலயத்திற்கும் சென்று வழிபட்டார். மேலும் கட்டிடங்களையும் பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு சென்றும் ஆய்வில் ஈடுபட்டார். கோட்டை அருங்காட்சியகத்துக்கு சென்று பழமையான பொருட்களை பார்வையிட்டார். முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தகவல் அறிந்து அவரை காண பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தவெக நிர்வாகிகள் அதிகளவில் குவிந்ததால் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்த இடமில்லாமல் வாகனங்கள் நிறைந்தது. இதனால் போலீசார் எந்த வாகனங்களையும் உள்ளே அனுமதிக்காமல் நுழைவாயிலை மூடினார். இதனால் பலர் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினர். இதன் காரணமாக ராஜாஜி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
