திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை 18ஆம் தேதி அன்று மூன்று சிறுவர்கள் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற விவகாரத்தில் தகவல்களை ஒழுங்காக வழங்கவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு 3 போலீசார் தற்போது அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நெல்லை அடுத்து வாகன சோதனைபோது பைக் சாவியை பறித்து கண்டித்தததால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை திங்கட்கிழமை 18ஆம் தேதி வீசினர். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் உடனடியாக தெரிவிக்காமல் இருந்த காரணத்தின் அடிப்படையில் மூன்று போலீசாரை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளனர்.
இந்த மூன்று சிறுவர்கள் 18ஆம் தேதி ஒரே பைக்கில் வந்தபோது மானூர் எஸ்ஐ சஜி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கண்டித்தனர்.அத்துடன் பைக் சாவியை பறித்து கொண்டு பெற்றோரை அழைத்து வருமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் சிறிது நேரம் கழித்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ பற்ற வைத்து புறக்காவல் நிலையத்தின் வடப்பக்கம் வீசிவிட்டு தப்பி சென்றனர்.
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் உடனடியாக அந்த மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அங்கு பணியில் இருந்த காவலர்களும் உளவுத்துறை காவலர் அந்தோனி என்பவரும் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது.
இந்த நிலையில், தப்பி சென்ற சிறுவர்களை பிடித்த பிறவே மிகவும் தாமதமாக 19ஆம் தேதி மானூர் காவல் நிலையத்தில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த காரணங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தததாக கூறி உளவுத்துறை போலீஸ்க்கார் ஆகிய 3 பெரும் இடமாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் உத்தரவிட்டுள்ளார். . இவர்கள் அனைவருமே ஆயுதப்படைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
