கோவையில் தொழிலதிபரிடம் கிரிப்டோ கரன்சி கும்பல் கைவரிசை

 

கோவை, மே 22: கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த 45 வயதான தொழில் நிறுவனம் நடத்தி வரும் நபர் ஒருவருக்கு சில மாதம் முன்பு மெசஞ்சர் மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் விரைவாக அதிக பணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து மெசஞ்சர் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கு பிரத்யேகமான ஒரு செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதன்படி, செயலியை டவுன்லோட் செய்ய வைத்து அதிலிருந்து வங்கி கணக்கு விவரங்களை வாங்கினார். மேலும், 17 தவணைகளில் 29 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகை பெற்றார். ஆனால் முதிர்வு தொகை, வட்டி எதுவும் வழங்கப்படவில்லை. சந்தேகமடைந்த தொழில் நிறுவன உரிமையாளர் அந்த பெண்ணிடம் கேட்ட போது அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Related Stories: