பத்தாம் வகுப்பு தேர்வு: தற்காலிக மதிப்பெண் சான்று இன்று முதல் கிடைக்கும்

 

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த 20ம் தேதி வெளியானது. இதையடுத்து, பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் வழியாக இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்று பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், பிறந்த தேதி மற்றும் பதிவு எண்களை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று மதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல் பெற ரூ.275 கட்டணமாக அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்.

நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் இணைய தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கும் தேதி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

Related Stories: