திருப்பூரில் குடிநீர் வினியோகம் தாமதம்

 

திருப்பூர்,மே20: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 2, 3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் முலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையம் 4வது குடிநீர் திட்டம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 2வது குடிநீர் திட்டங்களில் சீரமைப்பு பணிகள் மற்றும் மின்தடை காரணத்தினாலும் மாநகரில் பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், குடிநீர் பகிர் மானத்தில் சீரான கால இடைவெளியில் குடிநீர் வினியோகிக்க இயலாத நிலை உள்ளது.
இதனால், குடிநீர் வினியோகம் ஓரிரு நாட்கள் காலதாமதமாக வினியோகமாகும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் குடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories: