சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவசர மருந்து சேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருந்து சேவையை உறுதிப்படுத்த உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
