கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி பெண் (30). இவர், ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டையில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் மில்லில் வேலையை முடித்து விட்டு வீடு செல்வதற்காக பாச்சிக்கோட்டையில் இருந்து பேருந்தில் சென்றுள்ளார். அப்போது வெட்டன் விடுதி அருகே சென்ற போது காரில் வந்த ஏற்கனவே அறிமுகமான 2 பேர், நாங்கள் உங்க ஊர் வழியாகத்தான் செல்கிறோம்.
உன்னை இறக்கி விடுகிறோம் என அழைத்து உள்ளனர். இதனை நம்பி பாசமலரும், காரில் சென்று உள்ளார். சிறிது நேரம் சென்றதும் காரில் இருந்த இருவரும் பாலியல் தொல்லை கொடுத்தனர். புகாரின்பேரில் மாரிமுத்து (55) என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
