மும்பை: மகாராஷ்டிராவில் சரக்கு கன்டெய்னர் லாரி, டெம்போ மற்றும் பைக் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
