×

சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய எடப்பாடி பழனிச்சாமி வலியுறுதல்

சென்னை: சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Edappadi Palanichami ,Edappadi Palanisami ,Chennai Nodachur ,Varadarajapurat ,
× RELATED மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய...