விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த ஸ்ரீதேவி (45), சாந்தி (42) இருவரும் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சாந்தியின் கணவரின் நண்பர் முத்து (60) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக கைதாகியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
