நெல்லை: நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ரசூல். இவருடைய மகள் ரிப்கா பாத்திமா (4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 27ம் தேதி அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ரிப்கா பாத்திமா நேற்று உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அடினோ வைரஸ் என்பது சளி, தொண்டை வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ் கிருமி. இது பொதுவாக சிறு குழந்தைகளை அதிகம் தாக்கும் இயல்புடையது. இந்த வைரஸ் தீவிரமடைந்து நுரையீரலை தாக்கும் போது அது நிமோனியா காய்ச்சலாக மாறுகிறது. இந்த மாதிரியான அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டு சிறுமி இறந்தாக தெரிவித்தனர்.
