பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகக்கூறி போஸ்டர்: வீட்டு அருகில் ஒட்டியதால் பரபரப்பு

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 25 பேர் தனியாக சென்று, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அதிமுக 2 ஆக உடைந்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் நேற்று காலை பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதி ஜெ.பேரவை முன்னாள் பகுதி செயலாளர் ஜினோத்குமார் சம்பத் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட மக்களின் மாபெரும் இயக்கமான அஇஅதிமுகவை அடகு வைக்க துணிந்த பொதுச்செயலாளரே பதவி விலகு.. பதவி விலகு…,’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர், எடப்பாடி பழனிசாமியின் வீடு இருக்கும் சேலம் நெடுஞ்சாலைநகரில் அவர் செல்லும் பாதையில் சுற்றிச்சுற்றி பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள், அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.

Related Stories: