×

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தம்: பிரதமர் மோடி கையெழுத்து

அபுதாபி: பிரதமர் மோடி நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். அவர் தனது பயணத்தின் முதற்கட்டமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான வியூகம் சார்ந்த உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பெட்ரோலிய இருப்புக்களை பராமரிக்கும் பொறுப்புள்ள பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் லிமிடெட் ஒத்துழைப்பை நோக்கமாக கொண்டு அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது எரிசக்தி பாதுகாப்பு, இந்தியாவின் பெட்ரோலிய இருப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் திரவ இயற்கை எரிவாயு சேமிப்பு வசதிகளில் சாத்தியமான ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

தொடர்ந்து பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல், தொழில்நுட்ப பகிர்வு மற்றும் தேசிய, பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு அதிபர் அகியோர் கையெழுத்திட்டனர்.  பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணமானது சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அவர் நெதர்லாந்து புறப்பட்டுச்சென்றார்.

திரவ பெட்ரோலிய காஸ் விநியோகம் மற்றும் வியூகம் சார்ந்த பெட்ரோலிய இருப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாக இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நீடிக்கும் இந்தப் பயணத்தில், பிரதமர் மோடி நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடைபெறும் 3வது இந்திய நோர்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், இத்தாலியில் 2025ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரையிலான கூட்டு வியூகம் செயல்பாட்டுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

* இந்தியாவில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு
பிரதமர் மோடியின் பயணத்தின் போது இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் வரலாற்றுச் சிறப்புமிக்க எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தியாவில் அபுதாபி ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உறுதியளித்தது. மொத்தம் 6 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.

Tags : India ,PM Modi ,Abu Dhabi ,Modi ,Delhi ,Netherlands ,Sweden ,Norway ,Italy ,United Arab Emirates ,Sheikh ,
× RELATED சீன பயணத்தை முடித்து நாடு திரும்பினார் டிரம்ப்