போடி, மே 15: போடி அருகே சின்னமனூர் ஒன்றியம் எரணம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பால்சாமி (55). இவரது மகன் வீரக்குமார் (23). இவரது நண்பர்கள் வல்லரசு, சந்தோஷ்குமார் ஆகியோருடன் டூவீலரில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு நேற்று முன் தினம் சென்றார். நாகலாபுரம்-கரையாம்பட்டி இடையே சென்ற போது, தேவாரத்தை கணேசன் என்பவர் ஓட்டி வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். வல்லரசு, சந்தோஷ்குமார் படுகாயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வீரக்குமாரின் தந்தை பால்சாமி கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
