×

தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் அதிரடி கைது!

சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது கண்டுபுடிக்கப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சொந்த நாட்டுக்கு திரும்ப சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது கையில் மை இருந்ததை வைத்து கண்டுபிடித்த குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களை பரிசோதித்தபோது சட்டவிரோதமாக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தது தெரிய வந்துள்ளது.

கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, இலங்கையை சேர்ந்த ஒருவர் என 3 பேரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்த போதிலும், தங்களுடைய பழைய இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்யாமல், அதனைப் பயன்படுத்தி இந்த மூன்று பேரும் வாக்களித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்திய சட்டப்படி, ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது, அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே ரத்தாகிவிடும். இதன் விளைவாக, இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையையும் அவர் இழந்துவிடுகிறார். இந்தியக் குடியுரிமையைத் துறந்த பிறகு தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும்.

 

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai airport ,
× RELATED முதலமைச்சர் விஜயின் ராஜினாமாவைத்...