×

தவெக அரசை ஆதரித்த வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளிக்க எடப்பாடி தரப்பு முடிவு

சென்னை: தவெக அரசை ஆதரித்த வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளிக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது. அதிமுகவில் இரு தரப்பும் கொறடாக்களை நியமித்திருந்தாலும் கொறடாவை நியமிக்க பொதுச் செயலாளருக்கே அதிகாரம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதிமுகவில் இரு தரப்பும் கொறடாக்களை நியமித்திருந்தாலும் கொறடாவை நியமிக்க பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. அதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நியமித்த கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே செல்லும்.

தவெக அரசை வேலுமணி தரப்பு ஆதரித்தது துரோகம். அதிமுகவுக்கு வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் துரோகம் இழைத்துவிட்டனர். கொறடா உத்தரவிட்டும் தவெக அரசை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்தது சட்டவிரோதம். அமைச்சர் பதவிக்காக வேலுமணி தவெகவை ஆதரிக்கிறார். 6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதன் அடிப்படையில்தான் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கொறடா உத்தரவை மீறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர்.

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் சந்தித்தது தவறான முன்னுதாரணம். தொடக்கம் முதலே விஜய் தவறான பாதையில் செல்கிறார். என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags : Edappadi ,Speaker ,Velumani ,Thaweka government ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,general ,
× RELATED நீட் தேர்வை முழுமையாக ரத்து...