×

போர் பதற்றம் – 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை கடனாக வழங்கிய அமெரிக்கா

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி காரணமாக பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஸ்பிரிட் ஏர் லைன்ஸ் (Spirit Airlines) விமான நிறுவனம் மூடப்பட்டது. மேலும் பல எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கிடைக்காமல் மூடக்கூ டிய அபாயம் ஏற்பட்டது. அமெரிக்கா அரசாங்கம் போர் கால அடிப்படையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெயில் இருந்து சுமார் 9 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்குவதாக அறிவித்தது. அதன் தொடக்க கட்டமாக தற்போது 5.33 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் எக்ஸான் மொபில் (ExxonMobil), மராத்தான் பெட்ரோலியம் (Marathon Petroleum) மற்றும் டிராபிகுரா (Trafigura) உள்பட 9 நிறுவனங்களுக்கு இந்த எண்ணெய் வழங்கப்படுகிறது. அவற்றில் டிராபிகுரா (Trafigura) நிறுவனம் மட்டும் சுமார் 1.3 கோடி பீப்பாய் எண்ணெயைப் பெறுகிறது. இவ்வாறு கடன் அடிப்படையில் பெறப்படும் எண்ணெயை 2029-ஆம் ஆண்டுக்குள் வட்டியுடன் 24 சதவீதம் கூடுதல் கச்சா எண்ணெயை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : United States ,Gulf ,
× RELATED மாணவர் விசா திட்டத்தில் மோசடி...