சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.ரதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விதிகளை பின்பற்றாமல், அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் நியமனம் செய்திருப்பது சட்டவிரோதம்; முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை நீக்கி தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

