சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,560 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால், தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் மார்க்கெட் தொடங்கிய நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.14,100க்கு விற்கப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனையானது.
அதாவது, நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 14,330க்கும் சவரன் ரூ.1,14,640க்கும் விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.300க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,560 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.
