×

ஊத்துக்கோட்டை பகுதிகளில் மண் ஏற்றி செல்லும் போது தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 

ஊத்துக்கோட்டை, மே 12: ஊத்துக்கோட்டை பகுதிகளில், தார்ப்பாய் போடாமல் செல்லும் மண் லாரிகளால் வாகன ஓட்டிகள் விபத்ததில் சிக்கி வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதை சுற்றி அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, தாராட்சி, பாலவாக்கம் என 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.

ஒருநாளைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்படும். சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் சிலசமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக்கொள்கிறது. மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து மண் ஏற்றி வரும் லாரிகள் தார்ப்பாய் போடாமல் செல்வதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது மணல் பறந்து, அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், நான்கு முனை சந்திப்பில் வாகன ஓட்டிகள் அவரவர் விருப்பப்படி வாகனங்களை இயக்குகிறார்கள்.

இதனால், அண்ணா சிலை நான்கு முனை சந்திப்பில் இருந்து ஒரு புறம் போலீஸ் ஸ்டேஷன் வரையிலும், மறுபுறம் ஆந்திர எல்லை வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, நான்கு முனை சந்திப்பு பகுதியில் நிரந்தரமாக போலீசாரை நியமித்து, தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : wetland ,Futhukottai ,Futhukote ,Pudukkottai Municipality ,
× RELATED போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு