- Jawahirullah
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
- என்ற
- தமிழ்நாடு சட்டப்பேரவை...
சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும், தமிழ்நாட்டின் ஜனநாயக மற்றும் சமூகநீதி அரசியலின் மரபையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. மிக முக்கியமானதொரு காலத்தில் அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
சட்டப்பேரவையில் மக்களின் குரலாக செயல்பட்டு, ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு வலுவான குரல் கொடுப்பார் என்பது உறுதி. திராவிட இயத்தின் கொள்கைகள், சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகளை உறுதியாக முன்னெடுத்து செல்லும் எதிர்க்கட்சித் தலைமையை அவர் வழங்குவார் எனவும் நம்புகிறேன். அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
