×

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதியில், இன்று (மே 11, 2026) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து, தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வழிவகுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு உள்கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் மே 16ம் தேதி(சனிக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : Bank Sea ,Indian Meteorological Centre ,Chennai ,southwest Bank Sea ,Sri Lanka ,Gulf of Mannar ,Tamil Nadu ,
× RELATED எதிர்க்கட்சித் தலைவராக...