×

செங்குன்றம் பேரூராட்சியில் மலைபோல் குவிந்த குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

 

புழல்: செங்குன்றம் பேரூராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட பள்ளம் தெரு பகுதியில் செங்குன்றம் – மாதவரம் நெடுஞ்சாலையில் ஆடுதொட்டி அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிறிய அளவில் மழை பெய்தால் கூட குவிந்துள்ள குப்பைகளில் இருந்து துர்நாற்றம் அதிக அளவு வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி சுகாதாரத்துறையினருக்கு புகார் தெரிவிக்கும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொற்று நோய்கள் வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பேரூராட்சி உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, குப்பையில்லாத பேரூராட்சியாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : 8th Ward ,Vertical-Matwaram Highway ,
× RELATED 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி:...