சென்னை: பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டது அதிகாரிகள் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, ஆளுநரின் விருப்பப்படியோ, ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்.
இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட்டு முதலிடம் பெறுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா என்பதை தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும். அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியாக இருக்கும். 15வது நிதிக் குழு நிர்ணயித்த வரம்புகளுக்கு உள்ளேயே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது. முழு அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும் என கூறியுள்ளார்.
