×

டூவீலரில் சென்றவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகை செல்போன், பணம் பறிப்பு

 

திருச்சி, மே 9: திருச்சி ஏர்போர்ட் பகுதியில் டூவீலரில் வந்த 2 பேரை வழிமறித்து அரிவாளால் தாக்கி தங்கநகை, செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற 5 மா்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி ஏர்போர்ட் அண்ணாநகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சையதுமுகமது ஹக்கிம்(45). இவர் இஸ்லாமியர்களை ஹஜ் புனித யாத்திரை அனுப்பும் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சென்ற தனது நண்பரிடம் 50 கிராம் தங்கச்செயினை கொடுத்து அனுப்பினார். இந்நிலையில் அதனை பெற்றுக்கொள்வதற்காக மே.7ம் தேதி இரவு திருச்சி ஏர்போர்ட்டுகு ஹக்கிம் மற்றும் அவரது நண்பர் முகமது கவுஸ் ஆகியோர் டூவீலரில் சென்றனர். பின்னர் நகையை பெற்றுக் கொண்டு இருவரும் ஏர்போர்ட் அண்ணாநகர் பள்ளிவாசல் அருகே டூவீலரில் வந்தபோது, 3 மர்ம நபா்கள் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டினர்.

 

Tags : Trichy ,Trichy Airport ,Trichy Airport Annanagar Kumaran Street… ,
× RELATED லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 595 காளைகள்