புதுடெல்லி: மோசடி மற்றும் ஏமாற்றுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிய புலனாய்வு அமைப்பு பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள 17 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் நடத்திய சோதனைகளில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கேம்ஸ்கிராப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான தீபக் சிங், பிரித்விராஜ் சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு நிறுவனர் விகாஸ் தனேஜா பெங்களூருவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேம்ஸ்கிராப்ட் நிறுவனத்திற்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக, ரூ. 18.57 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகையைக் கொண்டிருந்த எட்டு வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது.
