புதுச்சேரி: கடந்த 2024ல் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைதான கருணாஸ் (19), விவேகானந்தன் (59) இருவரில், கடந்தாண்டு விவேகானந்தன் சிறையில் தற்கொலை செய்தார். குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனையுடன், சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
