கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒற்றை வரியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க தேர்தலில் தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். இந்த தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பல்ல என்றும் பாஜ, தேர்தல் ஆணையத்தின் கூட்டு சதியால் தோற்கடிக்கப்பட்டதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்று முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். அவரது 5 ஆண்டு முதல்வர் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசியலமைப்பு சட்டம் பிரிவு 174 மூலம் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், மே 7, 2026 அன்றிலிருந்து மேற்கு வங்க சட்டப்பேரவை கலைக்கப்படுகிறது’ என ஒற்றை வரி இடம் பெற்றிருக்கிறது.
சட்டப்பேரவை கலைக்கப்பட்டதன் மூலம், ராஜினாமா செய்யாவிட்டாலும் இனி மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
