×

ஏரியில் ஆண் சடலம் மீட்பு

 

ஈரோடு, மே 8: கவுந்தப்பாடி அடுத்த செந்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில் 65 வயது மதிக்கதக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக, கவுந்தப்பாடி போலீசார், விஏஓ ராசாமணி நேற்று முன்தினம் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Erode ,Kaundappadi ,VAO Rasamani ,Senthampalayam ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி