மயிலம் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்

 

சென்னை: எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால் எம்பி பதவியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்தநிலையில், அவர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால் இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் நேற்று டெல்லி சென்ற சி.வி.சண்முகம், நாடாளுமன்ற செயலாளரை சந்தித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்தார். அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் ஏற்றுக் கொண்டார்.

 

Related Stories: