தமிழக அரசியலில் திடீர் திருப்பம் தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட முதல்வருக்கான பாதுகாப்பு நள்ளிரவு வாபஸ்: தன்னிச்சையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை ஆளுநர் அழைத்து கண்டிப்பு

 

சென்னை: தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக தலைவர் விஜய்க்கு எப்படி முதல்வருக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகளை ஆளுநர் நேரில் அழைத்து கடிந்து கொண்டதால் அவசர அவசரமாக நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்பை காவல்துறை வாபஸ் பெற்றப்பட்டது. தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினார். அதேநேரம் தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப் பிரமாணம் என ஆளுநர் உறுதியாக கூறிவிட்டார். இதனால் விஜய் ஏமாற்றத்துடன் திரும்பினார். நிலைமை இப்படி இருக்க, தவெக தலைவர் விஜய்க்கு 108 இடங்களில் வெற்றி பெற்றதால், அடுத்த முதல்வர் விஜய் தான் என தமிழக காவல்துறை அதிகாரிகள் ஆளுநர் மற்றும் உள்துறை செயலாளர் ஆலோசனை இன்றி நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு முதலமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் வழங்கப்பட்டது. குறிப்பாக வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகள், உள்துறையின் பாதுகாப்பு தொடர்பான சாதனங்கள், முதல்வருக்கான பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அனைத்தும் தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்டது.

இதையறிந்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று முன்தினம் இரவு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து, யார் உத்தரவுப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப ெபற்றது. தவெக தலைவர் விஜய்க்கு எப்படி முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பும், கான்வாயும் வழங்கப்பட்டது என்று கேள்விகள் கேட்டார். ேமலும், தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகாரியாக வேலூர் சரகத்தில் பணியாற்றிய டிஐஜி தர்மராஜன் யார் ஆலோசனைப்படி விஜய்க்கான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது உள்துறை செயலாளருக்கு தெரியுமா, தமிழ்நாடு உளவுத்துறைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த அரவிந்த், அரியலூர் எஸ்பியாக இருந்த பாலசுப்பிரமணியம் சாஸ்திரி ஆகியோர் சிறப்பு அதிகாரியாக நியமித்தது ஏன், அவர்களை உடனே அந்த பணிகளில் இருந்து விடுவித்து, அவர்கள் பணியாற்றிய பழைய பணிகளில் தொடர வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து முதலமைச்சருக்கான பாதுகாப்பு அதிகாரியாக பணி அமர்த்தப்பட்ட டிஐஜி தர்மராஜன், உளவுத்துறை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட எஸ்பிக்கள் அரவிந்த், பாலசுப்பிரமணியன் சாஸ்திரி ஆகியோர் கடந்த 5ம் ேததி டிஜிபி உத்தரவுப்படி புதிய பணிக்கு சேர்ந்தனர். ஆனால் ஆளுநர் உத்தரவால், 3 ஐபிஎஸ் அதிகாரிகளும் உடனே டிஜிபி திரும்ப பெறப்பட்டது. மேலும், தவெக தலைவர் விஜய்க்கு நீலாங்கரை வீட்டில் வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு மேல் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திரும்ப பெற்றனர். பட்டினப்பாக்கத்தில் கட்சி நிர்வாகிளுடன் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க யாரிடம் ஆதரவு கேட்பது தொடர்பாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போதே ஆளுநரின் உத்தரவுப்படி விஜய்க்கு வழங்கப்பட்ட முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பும் மற்றும் கான்வாய் வாகனங்களை காவல்துறை திரும்ப பெற்றது.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய், நேற்று முன்தினம் இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்து அவரது காரில் கான்வாய் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு அவரது பவுன்சர்கள் பாதுகாப்புடன் சென்றார். விஜய் நீலாங்கரை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியும் காவல்துறை அகற்றி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் அமைப்பு சட்டத்தை சரியாக புரிந்து ெகாள்ளாமல் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு தன்னிச்சையாக முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் கான்வாய் வழங்கிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: