அமெரிக்கா: ஈரான் மீதான ஆபரேஷன் எபிக் பியூரி நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானுடைய அணு சக்திகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஈரானின் ராணுவ கட்டமைப்பினை பலவீனப்படுத்துவது இவை இரண்டும் தான் எங்களுடைய நோக்கங்களாக இருந்தது, அந்த நோக்கங்கள் இப்பொழுது எட்டப்பட்டுவிட்டதாக ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானுடைய கடல் படை மற்றும் விமான படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதனுடைய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் உள்ள சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி புதைக்கும் கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும், ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு நெருக்கமாக வந்ததாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இனி அவர்களால் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது என்றும் டிரம்ப் கூறினார்.
