நிதி நெருக்கடி காரணமாக ஐ பேக் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிப்பு: சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு

 

லக்னோ: நிதி நெருக்கடி காரணமாக ஐ பேக் நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்து கொண்டதாக சமாஜ்வாடி தெரிவித்துள்ளது. ஐ பேக் நிறுவனம் நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெறுவது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பல மாநிலங்களின் அரசியல் கட்சிகள் ஆலோசனைகளை பெற்று, அதன்படி தேர்தல் வியூகங்களை வகுத்து வெற்றியும் பெற்றுள்ளன. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சியும் ஐ பேக் நிறுவனம் மூலம் ஆலோசனைகளை பெற ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் ஐ பேக் நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “2027 தேர்தலை முன்னிட்டு ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால், சமாஜ்வாடி கட்சியில் உள்ள நிதி நெருக்கடி காரணமாக ஐ பேக் நிறுவனத்துடனான தொடர்புகளை கட்சி துண்டித்து கொண்டது. பிற மாநில தேர்தல் முடிவுகளை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை” என விளக்கம் அளித்தார்.

 

Related Stories: