வேலூர் மாவட்டத்திற்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்தார். தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 15 நாள்களுக்கு கோவிலில் தினமும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 11 ஆம் தேதி அம்மன் திருக் கல்யாணமும், 14 ஆம் தேதி தேரோட்டமும், 15 ஆம் தேதி அம்மன் சிரசு திருவிழாவும், 16 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 17 ஆம் தேதி பூ பல்லக்கும், 22 ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வலத் திருவிழா மே 15-ல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள வசதியாக, சிரசு ஊர்வலத் திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Related Stories: