×

கரியமலை கோபால கிருஷ்ணர் பத்ரகாளியம்மன் கோயில் விழா

மஞ்சூர், மே 6: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கரியமலையில் பத்ரகாளியம்மன் மற்றும் கோபாலகிருஷ்ணர் கோயில் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.  முன்னதாக கோபாலகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காளியம்மன் கங்கையில் இருந்து 108 குடங்களில் ஊர்வலமாக புனித நீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வேத,மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நடத்தப்பட்டது.தொடர்ந்து கோபாலகிருஷ்ணருக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காளி அம்மன் கோயிலில் வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் குந்தை சீமைக்குட்பட்ட பல்வேறு கிரமங்களை சேர்ந்த படுகரின மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அனைவரும் வரிசையில் நின்றபடி பாரம்பரிய வழக்கப்படி காணிக்கை செலுத்தினார்கள். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மணிகண்டன் தலைமையில் விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்திருந்தனர்.

 

 

Tags : Kariyamalai Gopala Krishna Bhadrakaliamman Temple Festival ,Manjoor ,Bhadrakaliamman ,Gopala Krishna ,Kariyamalai ,Nilgiris district ,Kumbabhishekam ,Gopala ,Krishna ,Kaliamman ,
× RELATED மலைப்பாதையில் அருவியாக கொட்டிய நீர்