அவனியாபுரம், மே 6: மதுரை, பெருங்குடியை அடுத்த தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கந்தசாமி (49). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார். நேற்று வலையங்குளம் பகுதியில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்வதற்கான, கந்தசாமி மின் கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்
