×

திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்கிறார் விஜய்: மாஜி ஐஏஎஸ் அல்லது முன்னாள் அமைச்சர் போட்டி?

திருச்சி: திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒரு வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகண்டால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளாராம்.

சென்னை பெரம்பூர் தொகுதியே அவருக்கு பணியாற்ற ஏற்ற இடம், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றாலும், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் கட்டாயம் ராஜினாமா செய்வார் என அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘திருச்சி கிழக்கு தொகுதியில் யார் தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட போகின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. லால்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தோல்வியடைந்தார்.

அவரை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என ஒரு தரப்பும், ஏற்கனவே அவருக்கு கொடுத்த வாய்ப்பில் அவர் பிரகாசிக்கவில்லை, முதல்முறை களம் கண்ட இளைஞர்கள் கூட வெற்றிமகுடம் சூடிவிட்டனர். ஆனால் அமைச்சர் பதவி வரை வகித்து அரசியல் அனுபவம் கொண்ட ஒருவர் தோல்வியடைந்து விட்டார். மீண்டும் அவரை வைத்து விஷப்பரீட்சை மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என ஒருதரப்பும் கூறி வருகிறது’’ என்றனர்.

Tags : Vijay ,Trichy East ,IAS ,Trichy ,Thaweka ,Chennai Perambur ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...